Song lyrics
Kanimozhiye Ennai
கனிமொழியே என்னை
60562 views
Singer · Karthik
Lyrics · Vairamuthu
The lyrics
ஆ: கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்
இதயம் உடைத்து என்னை வாழச் சொல்கிறாய்
இமைகள் பறித்து என்னை தூங்கச் சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா
(ஆ: நான் எட்டு)
உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால்
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்போன்
அடி உந்தன் கன்ன குழியில் என்னை புதைத்து வைத்தால்
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே
சிறு காதல் பேசும் ஊமைக் கிளியே
நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே
தென்றலே வா முன்னே முத்தமா கேட்கிறேன்
முறுவல் தான் கேட்கிறேன்
கனிமொழியே... ம்ம்ம்ம்ம்
கடைவிழியே... ம்ம்ம்ம்ம்
பறவை பறக்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்
விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்
என்னை கட்டி போடும் காந்த சிமிழே
ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே
என் காலை கனவின் ஈரம் நீதானா
வாழலாம் வா பெண்ணே வலது கால் எடுத்து வை
வாழ்க்கையை தொட்டு வை
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்
பெ: இதயம் உடைத்து என்னை வாழச் சொல்கிறாய்
இமைகள் பறித்து என்னை தூங்கச் சொல்கிறாய்
ஆ: ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா
(ஆ: நான் எட்டு)
கடை விழியால் என்னை தின்று போகிறாய்
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்
இதயம் உடைத்து என்னை வாழச் சொல்கிறாய்
இமைகள் பறித்து என்னை தூங்கச் சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா
(ஆ: நான் எட்டு)
உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால்
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்போன்
அடி உந்தன் கன்ன குழியில் என்னை புதைத்து வைத்தால்
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே
சிறு காதல் பேசும் ஊமைக் கிளியே
நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே
தென்றலே வா முன்னே முத்தமா கேட்கிறேன்
முறுவல் தான் கேட்கிறேன்
கனிமொழியே... ம்ம்ம்ம்ம்
கடைவிழியே... ம்ம்ம்ம்ம்
பறவை பறக்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்
விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்
என்னை கட்டி போடும் காந்த சிமிழே
ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே
என் காலை கனவின் ஈரம் நீதானா
வாழலாம் வா பெண்ணே வலது கால் எடுத்து வை
வாழ்க்கையை தொட்டு வை
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்
பெ: இதயம் உடைத்து என்னை வாழச் சொல்கிறாய்
இமைகள் பறித்து என்னை தூங்கச் சொல்கிறாய்
ஆ: ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா
(ஆ: நான் எட்டு)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
En Kaadhal Theeye என் காதல் தீ
Sung by S. P. Balasubramaniam
-
Vinnathaandi Anbe விண்ணை தாண்டி
Sung by Vijay Prakash
-
Pazhangkalla பழங்கள்ளா விஷ
Sung by Dhanush
-
Kanimozhiye Ennai கனிமொழியே என்னை
Sung by Karthik
-
Raakkozhi Raakhozhi ராக்கோழி ராக்கோழி
Sung by Hariharan, Palghat Sriram
-
Mannavane En மன்னவனே என்
Sung by Gopal Rao, Shakthisree Gopalan
-
Iravinil Oruvanai இரவினில் ஒருவனை