Kundai Vettu Song Lyrics

கூண்டவிட்டு ஒரு பாடல் வரிகள்

Katta Pomman (1993)
Movie Name
Katta Pomman (1993) (கட்டபொம்மன்)
Music
Deva
Singers
K. J. Yesudas, P. Susheela
Lyrics
Vaali
பெண் : கூண்டவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மாணலாச்சு
காதலிச்ச காலமெல்லாம்
கனவு போல ஆச்சு
அதில் கரையுது எந்தன் மூச்சு
பூந்தோரணம் அது ஏன் வாடணும்
போராட்டமா நம் சீர் சீதனம்
தண்ணியில மானப் போல நானிருக்கேன்
ஓ ஓ தரையில மீனைப் போல நீயிருக்க

கூண்டவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மாணலாச்சு
காதலிச்ச காலமெல்லாம்
கனவு போல ஆச்சு
அதில் கரையுது எந்தன் மூச்சு

***

பெண் : வெத்தலையில் பாக்கு வெச்சு
பத்துப் பேரைப் பார்க்க வெச்சு
கட்டிக்கிட ஆசைப்பட்டேன் நானே
மத்தவங்க துணையுமில்ல
அத்தை மவன் உறவுமில்ல
துக்கப்பட்டு துடிக்குது ஒரு மானே
தீராத கோபம் அது யார் போட்ட தூபம்
இதில் நான் செய்த பாவம் என்ன
என்னவோ பாடுறேன்
சொந்தம் ஒண்ணு தேடுறேன்

கூண்டவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மாணலாச்சு
காதலிச்ச காலமெல்லாம்
கனவு போல ஆச்சு
அதில் கரையுது எந்தன் மூச்சு

***

ஆண் : நம்பி வந்த காதல் ஒண்ணு
அன்பு உள்ள பாசம் ஒண்ணு
ரெண்டுப் பக்கம் தவிக்கிறண்டி மானே
அண்னனுக்கு பயந்த தம்பி
அண்ணியாரு மனசை நம்பி
உன்னை இங்கு அழைத்து வந்தேன் நானே
தாய் தந்தை கோபம்
அதில் வாழ்கின்ற பாசம்
ஒரு தவறாகிப் போகாதடி
மெல்ல மெல்ல மாறும்
நல்ல வழிக் கூறும்

கூண்டவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மாணலாச்சு
தாலி கட்டி முடிந்ததுமே
தாரம் என்று ஆச்சு
இனி வேறு என்ன பேச்சு
பூந்தோரணம் அது வாடாதம்மா
போராடியே அதைக் காப்பேனம்மா
தண்ணியிலே மானைப் போல நானிருக்கேன்
ஓய் தரையிலே மீனைப் போல நீயிருக்க

பெண் : கூண்டவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மாணலாச்சு

ஆண் : தாலி கட்டி முடிந்ததுமே
தாரம் என்று ஆச்சு
இனி வேறு என்ன பேச்சு