Vaanathil varuvathu Song Lyrics

வானத்தில் வருவது பாடல் வரிகள்

Kaanchi Thalaivan (1963)
Movie Name
Kaanchi Thalaivan (1963) (காஞ்சித் தலைவன்)
Music
K. V. Mahadevan
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Alangudi Somu
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு

நாணத்தில் பெண்ணூக்கு அழகு வரும் – அதை
நாடி வந்தால் புது உலகு வரும்
நாணத்தில் பெண்ணூக்கு அழகு வரும் – அதை
நாடி வந்தால் புது உலகு வரும்
நானென்ற தனிமை அடங்கிவிடும் – அங்கு
நாமென்ற இனிமை தொடங்கி விடும்
நானென்ற தனிமை அடங்கிவிடும் – அங்கு
நாமென்ற இனிமை தொடங்கி விடும்

வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு

மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் – அதை
ஏந்திடக் கைகள் தாவி வரும்
மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் – அதை
ஏந்திடக் கைகள் தாவி வரும்
தீங்கனி இதழில் கதை வளரும்
தீங்கனி இதழில் கதை வளரும் – கண்கள்
தேடிய சுகத்தில் அமைதி பெறும் – கண்கள்
தேடிய சுகத்தில் அமைதி பெறும்

வானத்தில் வருவது ஒரு நிலவு இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு

கோடையும் குளிராய் மாறி வரும் – அதில்
கோடி இன்பம் ஊறி வரும்
கோடையும் குளிராய் மாறி வரும் – அதில்
கோடி இன்பம் ஊறி வரும் – மண
மேடையில் திருநாள் மலர்ந்து வரும் – அதில்
மோஹன வாழ்வு கனிந்து வரும்
மேடையில் திருநாள் மலர்ந்து வரும் – அதில்
மோஹன வாழ்வு கனிந்து வரும்

வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு