Yaar Aval Yaaro Song Lyrics

யார் அவள் யாரோ பாடல் வரிகள்

Muppozhudhum Un Karpanaigal (2012)
Movie Name
Muppozhudhum Un Karpanaigal (2012) (முப்பொழுதும் உன் கற்பனைகள்)
Music
G. V. Prakash Kumar
Singers
Mohammed Irfan
Lyrics
Thamarai
யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒன்றில் கதி

ஓர் ஆகாய தூரம்
நான் போகின்ற போதும் என் பக்கத்தில் நிற்பாள் அவள்
நான் வீழ்கின்ற நேரம் ,
பொன் கை ரெண்டும் நீளும் தன் கக்கத்தில் வைப்பாள் அவள்

நான் காலைப் பனி
நீ புல்லின் நுனி நான் வீழாமல் நீ தாங்கினாய்

நான் கேளா ஒலி
நீதானே மொழி என் ஓசைக்கு பொருளாகிறாய்…ஓஓ ஹோ …

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

நான் தூங்காத போதும்
என் துன்பத்தின் போதும் என் அன்னை போல் காத்தாய் எனை
பொன் வான் எங்கும் நீயே
விண்மீன் ஆகின்றாயே நான் அண்ணாந்து பார்ப்பேன் உனை
நான் கேட்கும் வரம்
என் வாழ் நாள் தவம் உன் அன்பன்றி வேறேதடி

ஒஹ் பாரா முகம்
நீ காட்டும் கணம் நான் கூறாமல் சாவேனடி …ஹோ ஹோ …

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாணி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்