Sendhoora Pandikku Song Lyrics

செந்தூரப் பாண்டிக்கொரு பாடல் வரிகள்

Sendhoorapandi (2004)
Movie Name
Sendhoorapandi (2004) (செந்தூரபாண்டி)
Music
Deva
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
காதல் பாட்டு எடுக்கும் வயசு இது
கேட்டு கிருகிருக்கும் மனசு இது
பொறுத்திரு மானெ பசுமரத்தேனெ
நெனைச்சது நிறைவேறும்

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட

உச்சிமேலெ முடிஞ்சு வெச்ச மரிக்கொழுந்து வாசம்
உன்னுடைய பேரைச் சொல்லி திசை முழுக்க வீசும்

கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம்
இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம்

சோறும் குடிநீரும் வேணாம்
மாமா உன்னை பார்த்தாலே

ஆரும் பசியாரும் தானா ஆசை மொழி கேட்டாலே

உன்னை பிரிஞ்சிருக்க தன்னந்தனிச்சிருக்க
ஆம்மம்மாடி அப்பப்பாடி என் மனசு ஒத்துக்காது

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட

சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட

உன்னைச்சேர பிறப்பெடுத்து உருகும் இந்த மாது
தெற்கு திசை தென்றலிடும் தினமும் விடு தூது

அம்மன் கோயில் சிலையெழுந்து அசைந்து வரும் போது
உள் மனசு தத்தலிக்கும் உறக்கமென்பது ஏது

நீதான் என்னை தீண்ட தீண்ட
ஏதோ ஒரு நோயாச்சு

நான்தான் உன்னை சீண்டி சீண்டி
பார்த்து ரொம்ப நாளாச்சு

கொஞ்சம் இடம் கொடுத்தா பச்சை கொடி புடிச்சா
எத்தனையோ வித்தைகளை இப்பவே நீ காட்டிடுவே

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட

தந்தனன்னா தந்தன்னா

சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட

தந்தனன்னா தந்தன்னா

காதல் பாட்டு எடுக்கும் வயசு இது
கேட்டு கிருகிருக்கும் மனசு இது

பொறுத்திரு மானெ பசுமரத்தேனெ
நெனைச்சது நிறைவேறும்

நாளை செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட