Pudhu Nadagathil Song Lyrics

புது நாடகத்தில் ஒரு பாடல் வரிகள்

Ooty Varai Uravu (1967)
Movie Name
Ooty Varai Uravu (1967) (ஊட்டி வரை உறவு)
Music
M. S. Viswanathan
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு..ஓஹோ..ஓஹோ..
புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்

அகப்பட்டுக்கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம்
அகப்பட்டுக்கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம்
ஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம்
ஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம்
ஒத்திகையில் தூங்கிவிட்டாள் ஏன் ஏன் தெரியவில்லை
நித்திரையில் யாரை கண்டாள் அது நான் தான் எவருமில்லை
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்

மூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவமில்லை
மூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவமில்லை
முடிவு சொல்லாமல் ஓடுகிறாய் நீ பெண்ணா புரியவில்லை
வந்த இடம் நல்ல இடம் வந்தால் தெரிந்துவிடும்
அந்த சுகம் என்னவென்று வாழ்ந்தால் புரிந்துவிடும்
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு..ஓஹோ..ஓஹோ..
புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்