Yaar Indha Saalai Song Lyrics

யார் இந்த சாலை பாடல் வரிகள்

Thalaivaa (2013)
Movie Name
Thalaivaa (2013) (தலைவா)
Music
G. V. Prakash Kumar
Singers
Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
ஆ: யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

பெ: யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது

ஆ: நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

பெ: குளிராலும் கொஞ்சம் அணலாலும்
பின்பு நெருக்கம் தான் கொல்லுதே

ஆ: எந்தன் ஆறானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே...
(ஆ: யார் இந்த)

தீர தீர ஆசையாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிர்க்கலாம்

பெ: என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொல்லலாம்

ஆ: என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்

பெ: எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்

ஆ: எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே...
(பெ: யார் எந்தன்)

ஆ: மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே

பெ: வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே

ஆ: கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி

பெ: என் பாதையில் இன்று உன் காலடி

ஆ: நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்த்ததும்
நெஞ்சம் எதிர் பார்த்ததும் ஏனடி

(ஆ: யாரு இந்த)

பெ: யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது

ஆ: நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

(பெ: குளிராலும்)

ஆ: எந்தன் ஆறானது இன்று வேறானது
வண்ணம் நூறானது வானிலே...