Ungalil Nam Annaavai Paarkiren Song Lyrics

கங்கை நதி பொங்கி பாடல் வரிகள்

Navarathinam (1977)
Movie Name
Navarathinam (1977) (நவரத்தினம்)
Music
Kunnakudi Vaidyanathan
Singers
S. P. Balasubramaniam, Vani Jayaram
Lyrics
Pulamaipithan
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்


கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே
கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே
சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்
சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்
ஓர் உயிர் தான் யாவருக்கும் உள்ளது
அது ஒருமுறை தான் நம்மை விட்டு செல்வது
ஓர் உயிர் தான் யாவருக்கும் உள்ளது
அது ஒருமுறை தான் நம்மை விட்டு செல்வது
செல்வம் இன்று வந்து நாளை போவது
செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது
செல்வம் இன்று வந்து நாளை போவது
செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது


ஏழை கதை மேடையிலே சொல்லுவார்
அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
ஏழை கதை மேடையிலே சொல்லுவார்
அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா
அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா
யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா
அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா