Dole Dole Than Song Lyrics

டோலு டோலு தான் பாடல் வரிகள்

Pokkiri (2007)
Movie Name
Pokkiri (2007) (போக்கிரி)
Music
Mani Sharma
Singers
Ranjith, Suchitra
Lyrics
Pa. Vijay
டோலு டோலு தான் அடிக்கிறான்
இரு தோலுந் தோலுந்தான் ஒரசுறான்
மேலும் கீழுமாய் இழுக்குறான்
முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்
புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை.

அய்ல அய்ல அடி ஆரியமாலா
அகந்த விழிகள் என்ன கூரியவேலா
ஒய்ல ஒய்ல நீ சில்மிஷ ப்பேரா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா
சுட சுட மழையை குளு குளு வெயிலை
முதல் முறை உலகத்தில் கண்டேனே
வெள்ளை நிற இரவை கரு நிற பகலை
முதல் முறை பார்த்தேனே

இடிகளை உரசி புயல்களை அலசி
நடந்தவன் நான் தானே
இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க
முதல் முறை பயந்தேனே

நீ ஞனன நமன நான் யரல வரல
நீ உடைந்து உருக நான் உணர்ந்து பருக
வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி
இடப்பக்கம் சுழலுது உன்னாலே
கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம்
விரிந்தது குடை போலே

இருபது வருஷம் பறவையைப் போலே
சுற்றிச் சுற்றி திரிந்தேனே
இரண்டொரு நொடியில் உனக்குள்ளே விழுந்து
முழுவதும் தொலைந்தேனே...

நீ எனக்குள் நுழைய... நான் உனக்குள் வளைய...
நாம் நமக்குள் கரைய... நம் உலகம் குறைய...

புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை.

அய்ல அய்ல அடி ஆரியமாலா
அகந்த விழிகள் என்ன கூரியவேலா
ஒய்ல ஒய்ல நீ சில்மிஷ ப்பேரா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா .....