Nadhi Odum Karaiyoram Song Lyrics

நதியோடும் கரையோரம் பாடல் வரிகள்

Aavarampoo (1992)
Movie Name
Aavarampoo (1992) (ஆவாரம் பூ)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki
Lyrics
Pulamaipithan
பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்

பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்

பெண் : நினைவோ வெறும் கனவோ
இது எதுவோ….ஓ….
காதல் வரும் யார்க்கும்
இந்த பாதை பொதுவோ

பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்

பெண் : பல கோலம் போடும்
வானம் மாறும் தடுமாறும்
புது ராகம் பாடும்
காற்றோ சோகம் பாடும்

பெண் : பனி தூங்கும் பூவின் தோற்றம்
ஏனோ அதில் மாற்றம்
பகல் கூட இரவாய் தோன்றும்
பாதை மாறும்

பெண் : {காதல் என்பது காலம் எங்கிலும்
காத்து நின்றிடவோ
ஆசை என்பது ஆடி காற்றினில்
ஒடி சென்றிடவோ} (2)

பெண் : உறவே வெறும் கனவே
வரும் நினைவே பழம் கதையே
கனவே என தெரிந்தும்
மனம் நினைக்கும் அதையே….

பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்

பெண் : இளம் காதல் ஆசை நெஞ்சில்
ஏக்கம் அது தாக்கும்
இரவென்ன பகலும் என்ன
தூக்கம் போகும்

பெண் : பிரிவேதும் அறியா நெஞ்சில்
உருவானது பாரம்
உறவென்னும் உணர்வால்
இங்கே உயிரே பாரம்

பெண் : {மோகம் என்பது வேகம் உள்ளது
வேலி போட்டிடவோ
வேலி போட்டொரு காதல் தீ
என்னை பாதுகாத்திடவோ} (2)

பெண் : விதியால் ஒரு சதியால்
இரு வழியாய் திசை பிரிந்தோம்
ஒரு நாள் அது திருநாள்
ஒரு உணர்வால் இணைவோம்

பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்

பெண் : நினைவோ வெறும் கனவோ
இது எதுவோ….ஓ….
காதல் வரும் யார்க்கும்
இந்த பாதை பொதுவோ

பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்