Azhagu Nilave Song Lyrics

அழகு நிலவே கதவு பாடல் வரிகள்

Pavithra (1994)
Movie Name
Pavithra (1994) (பவித்ரா)
Music
A. R. Rahman
Singers
K. S. Chithra
Lyrics
Vairamuthu
அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே
பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே

அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே
பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே

சொந்தங்கள் என்பது தாய் தந்தது
இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது
இன்னொரு தாய்மை தான் நான் கண்டது
அட உன் விழி ஏனடா நீர் கொண்டது
அன்புதான் தியாகமே
அழுகை தான் ஞ்யானமே
உனக்கும் எனக்கும் உள்ள உறவு
ஊருக்கு புரியாதே

அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே
பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே

அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே
பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே

பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூ முகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே
உன் நேசத்தில் வாழுவேன் நானாகவே

உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் எந்தன்
கண்ணீர் துளி ஒன்றே.