Deeyaalo Deeyalo Song Lyrics

டீயாலோ டீயாலோ பாடல் வரிகள்

Kayal (2014)
Movie Name
Kayal (2014) (கயல்)
Music
D. Imman
Singers
Oranthanadu Gopu
Lyrics
Yugabharathi
டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ

அவ மேல ஆச வச்சான்
அநியாய காதல் வச்சான்
அழு மூஞ்சா போனா மச்சான்
வருவான்னு பூச வச்சான்
வழி மேல கண்ண வச்சான்
மனசால தீ மிதிச்சான்
ஒரு கண்ணாடி கண்ணால உடஞ்சான்
அவ நெஞ்சோட நெஞ்ச வச்சிக் கடஞ்சான்
வித வைக்காம உள்ளூர விளஞ்சான்
அத வெள்ளாம பண்ண நித்தம் அலஞ்சான்

டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ

கரை ஏறி வந்த மீனு
கருவாடா போகுமுனு,
புரியாம போச்சே நண்பா

அறியாம சொன்ன சொல்லு
பழி வாங்கி கொல்லுமுன்னு
தெரியாம போச்சே நண்பா
திசை இல்லாம அப்போ நான் திரிஞ்சேன்
வழி இல்லாம இப்போ இங்க உறஞ்சேன்
விதி பந்தாட காத்தோட மறஞ்சேன்
சதி பண்ணாம சொட்டு சொட்டா கரஞ்சேன்

டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ

வருவாடா அந்த பொண்ணு,
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு
மனசோட சோகம் எல்லாம்
மறஞ்சேதான் போகுமுன்னு,
முழுசா நீ நம்பி நில்லு
அவ வரும்போது ஆனந்த சாரல்
வழி எங்கேயோ வண்ண வண்ணத் தூரல்
இது உசிரோட ஓயாதத் தேடல்
அட ஒருபோதும் கெட்டதில்ல காதல்
ஏ வருவாடா அந்த பொண்ணு,
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு
மனசோட சோகம் எல்லாம்
மறஞ்சேதான் போகுமுன்னு,
முழுசா நீ நம்பி நில்லு....


டீயாலோ டீயாலோ டீயாலோ


டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ