Kovil Mani Osai Song Lyrics

கோவில் மணி ஓசை பாடல் வரிகள்

Kizhake Pogum Rail (1978)
Movie Name
Kizhake Pogum Rail (1978) (கிழக்கே போகும் ரயில்)
Music
Ilaiyaraaja
Singers
Malaysia Vasudevan, S. Janaki
Lyrics
Kannadasan
ஆ : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ..
இங்கு வந்ததாரோ ... 
பாஞ்சாலி பாஞ்சாலி 

பெ : கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ ..
அவர் என்ன பேரோ ...
பரஞ்சோதி ... பரஞ்சோதி .. 

ஆ : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ... 
இங்கு வந்ததாரோ 
கன்னி பூவோ பிஞ்சு பூவோ .. 
ஏழை குயில் கீதம் தரும் நாதம் 
அது காற்றானதோ ... தூதானதோ .. 

பெ : கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ .. 
அவர் என்ன பேரோ 
பாட்டு பாடும் கூட்டத்தாரோ ..
ஏழை குயில் கீதம் தரும் நாதம் 
அது கொண்டாந்ததோ என்னை இங்கு ...

ஆ : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ... 

ஆ : பாடல் ஒரு கோடி செய்தேன் 
கேட்டவர்க்கு ஞானம் இல்லை 
ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு ...
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே .. 
சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை 
என்னை வென்றாளம்மா ...

ஆ : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ .. 


பெ : ஊருக்கு போன பொண்ணு 
உள்ளூரு செல்ல கண்ணு 
கோவில் மணி ஓசை கேட்டாலே .. வந்தாலே ..
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா .. 
பாடும் வரை பாடு தாளத்தோடு ... 
அதை நீயே கேளு ....

பெ : கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ ..

ஆ : என் மனது தாமரை பூ
உன் மனது முல்லை மொட்டு 
காலம் வருமே நீ கூட பெண்ணாக .. 
பெ : ஊரில் ஒரு பெண்ணா இல்லை.. தேடி பாரு 
நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு 
ஆ : அது நீதானம்மா 

ஆ : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ .. 
இங்கு வந்ததாரோ ... 
பெ : பாட்டு பாடும் கூட்டத்தாரோ ..
ஆ : ஏழை குயில் கீதம் தரும் நாதம் 
பெ : அது கொண்டாந்ததோ என்னை இங்கு ...
பெ : கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ ..