Minnalai Pidithu Song Lyrics

மின்னலை பிடித்து பாடல் வரிகள்

Shahjahan (2001)
Movie Name
Shahjahan (2001) (ஷாஜகான்)
Music
Mani Sharma
Singers
Unni Menon
Lyrics
Vairamuthu
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்
இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்
இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்
அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று
உயிரைத் தடவி திரும்பும் போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும் பொழுது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து
பாலில் நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டார்
உலக மலர்கள் பறித்து பறித்து
இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
பெண்ணை சமைத்து விட்டார்
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்த்து
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா
ஏஹே கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

மின்மினி பிடித்து மின்மினி பிடித்து
கண்களில் பதித்து கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்
தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து
மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்
காவித் துறவிக்கும் ஆசை வளர்ப்பவள்
அருகம்புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே
ஒஹோ தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம் மரணம் ரெண்டும் தருபவலெ

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்