Adi Poonguyile Song Lyrics

அடி பூங்குயிலே பாடல் வரிகள்

Aranmanai Kili (1993)
Movie Name
Aranmanai Kili (1993) (அரண்மனைக் கிளி)
Music
Ilaiyaraaja
Singers
Mano, Vaali
Lyrics
Vaali
ஆண் : அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

பெண் : அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு

பெண்குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

***

ஆண் : ஆத்தங்கரை அந்தப்புரம் ஆக்கி கொள்ளவா
அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா

பெண் : மாமன் கையில் பூவை தந்து சூடி கொள்ளவா
அடி ஆசைஎன்னும் ஊஞ்சல் கட்டி ஆடி கொள்ளவா

ஆண் : சொல்லு சொல்லு திட்டமென்ன சொல்லுவது கஷ்டமா
பொத்தி பொத்தி வச்சதென்ன
என்னென்னவோ இஷ்டமா

பெண் : கூவாம கூவுறியே கூ-கூ கூ-கூ பாட்டு
மாத்தாம மாத்திபுட்ட சொக்கு போடி போட்டு

ஆண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

பெண்குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

***

பெண் : ஊரைஎல்லாம் சுத்தி வந்த ஒத்தக்கிளியே
இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே

ஆண் : சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே
ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே

பெண் : வேரு விட்ட ஆலங்கன்னு வானம் தொட பாக்குது
வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது

ஆண் : பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு
பாடுகிற பாட்டுலதான் நீயும் அதை கூறு

பெண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

பெண்குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

பெண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

ஆண் : வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு

பெண்குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு