Nee Indri Naana Song Lyrics

நீ இன்றி நானா பாடல் வரிகள்

Adangathey (2018)
Movie Name
Adangathey (2018) (அடங்காதே)
Music
G. V. Prakash Kumar
Singers
Sinduri Vishal
Lyrics
Kabilan
நீ இன்றி நானா
நான் நீ ஆகுவேனா
இது காலம் தாண்டி
வாழும் காதலே

நீ விண்ணைத்தாண்டி போனால்
நான் என்னுள் உன்னை காண்பேன்
உன் கண்ணில் மௌன
காதல் பேசுவேன்

நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப

நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப

அலைந்தேன் தொலைந்தேன்
நம் வானம் பூமி மாறவே
பிறந்தேன் தொடர்ந்தேன்
உன்னோடு ஒன்று சேரவே

அன்பே அன்பே கண்டேன் உன்னை
என் மூச்சும் பேச்சும் தீர்ந்ததே
கண்ணால் கண்ணால் காதல் சொல்ல
உன் பார்வை மீண்டும் வேண்டுமே

ஹ்ம்ம்…ம்ம்ம்….ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்….
ஹ்ம்ம்…ம்ம்ம்….ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்…
ஓஹோ….ஓஒ…ஓஒ….ஓஒ (3)
ஓஹோ….ஊ…ஓஹோ…(2)

கை நீட்டும் தூரத்தில்
உன்னை நான் கண்டேனே
கையோடு கைரேகை கலந்திடுமா
உன் காதல் இல்லாமல்
என் காதல் சொல்லாமல்
உன் தூரம் என் பாதம் கடந்திடுமா

உனக்காய் இருப்பேன்
என் ஆயுள் காலமே
அதை நீ புரிந்தால்
என் ஆயுள் நீளுமே

அன்பே அன்பே உன் மௌனம் என்ன
உன் மாற்றம் தோற்று போகுமே
கண்ணால் கண்ணால் காதல் சொல்ல
உன் பார்வை மீண்டும் வேண்டுமே

நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப

நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப

உன் நெஞ்சில் என் ஓசை
உண்டான பின்னாலே
என் காதல் கண்ணாடி உடைந்திடுமா
என் சுவாசம் உன் மூச்சில்
என்றே  நீ சொன்னாயே
உன் வார்த்தை என் ஜீவன் மறந்திடுமா

தவணை முறையால்
என் காதல் சொல்கிறேன்
மறந்தே இருந்தே
நீ என்னை கொல்கிறாய்

நீதான் இல்லை எங்கே செல்ல
நான் கண்ணீர் தீயில் மூழ்கிறேன்
உன்னை என்னை ஒன்றாய் செய்ய
ஓர் காதல் தெய்வம் வேண்டினேன்

நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப

நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப