Kaathirundhene Naane Song Lyrics

காத்திருந்தேனே நானே பாடல் வரிகள்

Konjum Kumari (1963)
Movie Name
Konjum Kumari (1963) (கொஞ்சும் குமரி)
Music
Vedha
Singers
P. Susheela
Lyrics
Vaali

காத்திருந்தேனே நானே
காதலன் வந்தான் தானே
காதல் பிறந்த போது
மயங்கிடுவாளே மாது (காத்திருந்தேனே)

ஆத்தங்கரையில் மாலையில் நான்
அவனைப் பார்த்தேனே என்
காதல் நெஞ்சை நானே அவன்
கையில் சேர்த்தேனே...
என்னவோ பண்ணுதே
இதுதான் காதல் தாகமா.....(காத்திருந்தேனே)

ஆசை மயக்கம் தீருமா அவன்
கையால் தொடுவானா என்
வாசல் தேடி வந்தால் நான்
வெளியே விடுவேனா...
என்னவோ பண்ணுதே
இதுதான் காதல் தாகமா.....(காத்திருந்தேனே)