Semparuthi Semparuthi Song Lyrics

செம்பருத்தி செம்பருத்தி பாடல் வரிகள்

Vasanthakala Paravai (1991)
Movie Name
Vasanthakala Paravai (1991) (வசந்தகால பறவை)
Music
Deva
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Thamarai
கூப்பிட்டால் மலர் தேடி வண்டு வரும்
தேதி குறிபிட்டால் கொய்யாவை கிளிகள் கொத்தும்
சிந்தித்தால் வருகின்ற கவிதை போலே
கண்கள் சந்தித்தால் வர வேண்டும்
உண்மைக் காதல்

செம்பருத்தி செம்பருத்தி
பூவைப் போல பெண் ஒருத்தி
காதலன தேடி வந்தால்
கண்ணில் வண்ண மை எழுதி
மேலும் கீழும் ஆடுகின்ற
நூல் இழை தான்
மீண்டும் மீண்டும் நான் படிக்கும்
நூலகம் தான்
நாள் எல்லாம்
மீண்டும் மீண்டும் நான் படிக்கும்
நூலகம் தான்

செம்பருத்தி செம்பருத்தி
பூவைப் போல பெண் ஒருத்தி

பள்ளியறை நான் தானே
பாரிஜாத பூந்தேனே
கல்வி போல் காதலை
கற்று தர வந்தேனே

கற்றுக் கொடு கண்ணாலே
கன்னி மயில் உன்னாலே
என்னவோ என்னவோ
இன்பங்களை கண்டாலே

பருவ கனவு பிறக்கும் பொழுது
இறகு முளைத்து பறக்கும் மனது

உணர்ச்சி அலைகள் திரண்டு திரண்டு
கரையை கடக்கும் நதிகள் இரண்டு

இமை தானே கண்ணை சேர்ந்தது
எந்தன் இள நெஞ்சம் உன்னை சேர்ந்தது

செம்பருத்தி செம்பருத்தி
பூவைப் போல பெண் ஒருத்தி

எப்பொழுதும் எந்நாளும்
உன்னுடைய பூபாளம்
இல்லையேல் ஏங்குமே
என்னுடைய ஆகாயம்

ஜன்னல் வழி நாள் தோறும்
மின்னல் ஒன்று கை காட்டும்
அம்மம்மா என்னை தான்
ஆசைகளில் நீராட்டும்

எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்
இளமை தொடங்கி முதுமை வரைக்கும்

இரவும் பகலும் உறவை வளர்க்கும்
இடையில் இருக்கும் தடையை தகர்க்கும்
விலகாத சொந்தமானது
தெய்வம் முடி போட்ட பந்தம் ஆனது

செம்பருத்தி செம்பருத்தி
பூவைப் போல பெண் ஒருத்தி
காதலன தேடி வந்தாள்
கண்ணில் வண்ண மை எழுதி

மார்பின் மீது கண் மயங்கி சாய்ந்திடத்தான்
மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான்
கை தொடும்
மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான்

செம்பருத்தி செம்பருத்தி
பூவைப் போல பெண் ஒருத்தி