Chithirai Maadhathu Nilavu Song Lyrics

சித்திரை மாதத்து நிலவு வருது பாடல் வரிகள்

Paadu Nilaave (1987)
Movie Name
Paadu Nilaave (1987) (பாடு நிலாவே)
Music
Ilaiyaraaja
Singers
K. S. Chithra, Mano
Lyrics
Vaali

சித்திரை மாதத்து நிலவு வருது
வழி விடு வழி விடு மேகமே வழி விடு
மந்திர கானமும் மோகங்கள் தருது
விலகிடு விலகிடு நாணமே விலகிடு

மழைபோல் வருவாய் எனக்காக
நிலம்போல் தவிப்பேன் அதற்காக
சித்திரை மாதத்து நிலவு வருது
வழி விடு வழி விடு மேகமே வழி விடு

நீரோடும் ஆறாக நீ ஆகும் போது
நான்தானே மீன்போல நீராடுவேன்
மீன்போல நீ வந்து நீராடும்போது
நான்தானே தாளாமல் போராடுவேன்

காயங்கள் ஏதும் ஆகாமலே
காலோடு காலும் கையோடு கையும் பிண்ணாதோ
காவல்தான் மீறாதோ ஆவல்
நீ என்னை கொஞ்ச பட்டும் படமாலே
ஹும் ஹும் ஹும் தோகை மேனி வாடும் (சித்திரை)

ஊரெங்கும் ஓசைகள் ஓய்கின்ற நேரம்
ஆரம்பம் ஆகாதோ ஆராதனம்
நான் பாடும் ராகங்கள் ஒன்றல்ல நூறு
ஆனாலும் நீதான் என் ஆரோகணம்

தாளங்கள் என்றும் மாறாமலே
பாவங்கள் யாவும் பாட்டோடு சேரும்
நாள்தானோ..........
ஆதாரம் நீதானோ அன்பே
ஆனந்தம் என்றும் சந்தம் கெடாமலே
ஹும் ஹும் ஹும் காதல் கீதம் பாட (சித்திரை)