Nilavu Thoongum Neram (duet) Song Lyrics

நிலவு தூங்கும் நேரம் பாடல் வரிகள்

Kunguma Chimil (1985)
Movie Name
Kunguma Chimil (1985) (குங்குமச்சிமிழ்)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது

இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது

இது ஒரு தொடர்கதை 

தினம் தினம் வளர்பிறை

நிலவு தூங்கும் நேரம் 


நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே

வானம் காற்று பூமி இவை சாட்சியானதே

நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்

நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்

நான் இனி நீ... 

நீ இனி நான்

வாழ்வோம் வா கண்ணே

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது

இது ஒரு தொடர்கதை 
தினம் தினம் வளர்பிறை

நிலவு தூங்கும் நேரம் 


கீதை போலக் காதல் மிகப் புனிதமானது

கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்

வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்

ஏன் மயக்கம் 

ஏன் தயக்கம்

கண்ணா வா இங்கே

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது

இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது

இது ஒரு தொடர்கதை 

தினம் தினம் வளர்பிறை

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது