Oru Mani Adithal Song Lyrics

ஒரு மணி அடித்தால் பாடல் வரிகள்

Kaalamellam Kadhal Vaazhga (1997)
Movie Name
Kaalamellam Kadhal Vaazhga (1997) (காலமெல்லாம் காதல் வாழ்க‌)
Music
Deva
Singers
Hariharan
Lyrics
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்தப் பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்தப் பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ

வாசம் மட்டும் வீசும் பூவே
வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போல எங்கும் உன்னை
தேடுகிறேன் நான் தேடுகிறேன்
தேடி உன்னைப் பார்த்துப் பார்த்து
கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே
மூழ்குகிறேன் நான் மூழ்குகிறேன்
வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றைச் சிறகானேன்
காதலின் சுடும் தீயிலே நான் எறியும் விறகானேன்
மேடைத்தோறும் பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்தப் பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ

உந்தன் முகம் பார்த்த பின்னே
கண்ணிழந்து போவதென்றால்
கண்கள் ரெண்டும் நான் இழப்பேன்
இப்போதே நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே
நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதும்
மூடாதே இமை மூடாதே
காதலே என் காதலே
எனை காணிக்கை தந்துவிட்டேன்
சோதனை இனி தேவையா
சுடும் மூச்சினில் வெந்துவிட்டேன்
காதல் என்னும் சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் நின்று போவதையே
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்தப் பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ