Indha Mandrathil Song Lyrics

இந்த மன்றத்தில் ஓடிவரும் பாடல் வரிகள்

Policekaran Magal (1962)
Movie Name
Policekaran Magal (1962) (போலீஸ்காரன் மகள்)
Music
Viswanathan Ramamoorthy
Singers
P. B. Srinivas, S. Janaki
Lyrics
Kannadasan
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்

வண்ண மலர்களின் அரும்பாவாள்
உன் மனதுக்குள் கரும்பாவாள்
இன்று அலைகடல் துரும்பானாள்
என்று ஒரு மொழி கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்

நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
அவள் விடிந்தபின் துயில்கின்றாள்
என்னும் வேதனை கூறாயோ

இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்

தன் கண்ணனை தேடுகிறாள்
மன காதலை கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள்
என் அதனையும் கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்