Uchi Malaiyil Oorirukka Song Lyrics

உச்சி மலையில் ஊர் பாடல் வரிகள்

Kazhugumalai Kallan (1988)
Movie Name
Kazhugumalai Kallan (1988) (கழுகுமலை கள்ளன்)
Music
Chandrabose
Singers
Mano, Vani Jayaram
Lyrics
Vaali
பெண் : ஓஓஒ...உச்சி மலையில் ஊர் இருக்க
ஊருக்குள்ள தேர் இருக்க
தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது
வெக்கம் விட்டு கூப்பிடுமா பூந்தேரு
தேருக்கொரு ராசா நீ வேறாரு

ஆண் : ஓஓஒ...உச்சி மலையில் ஊர் இருக்க
ஊருக்குள்ள தேர் இருக்க
தேரு ஒரு ராசனத்தான் தேடும்போது
தேடுகிற ராசாவும் நானல்ல
காரணத்த என்னவென்று நான் சொல்ல

பெண் : தத்துற தொத்துற சித்திரச் சிட்டு
தொட்டால் என்ன தோஷமா
ஒத்தையில் நிக்கையில் மெத்தையில் இட்டு
முத்தாடினால் பாவமா

ஆண் : வெட்டவெளி பொட்டலிலே..ஏ..ஏ..ஏ..ஓஓஒ.
வெட்டவெளி பொட்டலிலே சுட்டெரிக்கும் கானலிலே
தண்ணி குடிக்க எண்ணியிருக்கும்
மானுக்கொரு மயக்கமா

பெண் : ஓஓஒ...உச்சி மலையில் ஊர் இருக்க
ஊருக்குள்ள தேர் இருக்க
தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது
ஆண் : தேடுகிற ராசாவும் நானல்ல
காரணத்த என்னவென்று நான் சொல்ல

ஆண் : இப்பவும் எப்பவும் உப்பளம் தன்னில்
பப்பாளி தான் காய்க்குமா
எண்ணிய எண்ணமும் எண்ணிய வண்ணம்
எல்லார்க்கும் தான் வாய்க்குமா

பெண் : நட்டநடு நெத்தியிலே....ஏ...ஏ...ஏ...
நட்டநடு நெத்தியிலே பொட்டெழுதி வச்சவள
கொள்ளையடிக்க கள்ளன் இருக்க
காலம் வந்து தடுக்குமா

ஆண் : ஓஓஒ...உச்சி மலையில் ஊர் இருக்க
ஊருக்குள்ள தேர் இருக்க
தேரு ஒரு ராசனத்தான் தேடும்போது
தேடுகிற ராசாவும் நானல்ல
காரணத்த என்னவென்று நான் சொல்ல

பெண் : ஓஓஒ...உச்சி மலையில் ஊர் இருக்க
ஊருக்குள்ள தேர் இருக்க
தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது
வெக்கம் விட்டு கூப்பிடுமா பூந்தேரு
தேருக்கொரு ராசா நீ வேறாரு.....