Pooja Vaa Song Lyrics

பூஜா வா பூஜா வா பாடல் வரிகள்

Priyamudan (1998)
Movie Name
Priyamudan (1998) (ப்ரியமுடன்)
Music
Deva
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Arivumathi
பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா
பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா
இந்திர மண்டலம் தேடும் அழகே வா
ரோஜா வா ரோஜா வா ஏதேன் தோட்டத்து ரோஜா வா
உறங்கும் போதும் வாழும் நினைவே வா
தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன்
உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்
உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே

பூவைப் பறிக்கும் போது அதில் ஈரம் உன் காதல்
வாளை எடுக்கும் போது அதில் வீரம் உன் காதல்

ஜன்னல் திறக்கும் போது வரும் காற்றில் உன் காதல்
கண்கள் உறங்கும் போது வரும் கனவில் உன் காதல்

உன் பேரைச் சொன்னாலே முத்தத்தின் சத்தங்கள்

நீ என்னைக் கண்டாலே தித்திக்கும் ரத்தங்கள்

நீ போடும் ஒரு கோலத்திலே
புள்ளியைப் போல் நான் இருந்தேனே
நீ தீண்டும் அந்த நேரத்திலே
பறவையைப் போல் நான் பறந்தேனே
நீ போகும் வழியெங்கும் நான்தானே ஆகாயமே

பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா

விளக்கை மூடும் சிமிழாய் நான் உன்னை மூடுகிறேன்
உன் மேல் விழுந்த வெயிலால் நான் சருகாய் மாறுகிறேன்

உந்தன் நினைப்பில் தானே நான் இன்னும் வாழுகிறேன்
உந்தன் சிரிப்பில் தானே என் உதயம் காணுகிறேன்

மீன் உன்னைக் கடித்தாலே ஆற்றுக்குத் தீ வைப்பேன்
மோகத்தீ மூட்டாதே ஆற்றுக்குள் நான் நிற்பேன்
உன் மனதில் என்னை நிரப்பிவிடு
உன் உலகில் என்னை பரப்பிவிடு
கடமைகளை நீ மறந்துவிடு
கண்களிலே நீ இருந்துவிடு

அன்பே உன் நிழல் கூட என் மீது விழ வேண்டுமே

பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா
ரோஜா வா ரோஜா வா ஏதேன் தோட்டத்து ரோஜா வா
உறங்கும் போதும் வாழும் நினைவே வா
தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன்
உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்
உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே