Oru paadhi Kathavu Song Lyrics

ஒரு பாதி கதவு பாடல் வரிகள்

Thandavam (2012)
Movie Name
Thandavam (2012) (தாண்டவம்)
Music
G. V. Prakash Kumar
Singers
Haricharan, Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
ஆ: நீ என்பதே நான் தானடி
நான் என்பதே நாம் தானடி... ஈ...

ஆ: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

பெ: ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்
(நீ என்பதே)

ஆ: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...

ஆ: இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சோர்த்து விடும்

பெ: ஓ... கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதில் செய்யும்

ஆ: இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பெய் பூட்டு போனது

பெ: வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே

ஆ: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...

ஆ: ஓ... இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோம்

பெ: ஓ... இன்றேனே நம் மூச்சும்
மென் காற்றில் இணைந்து விட்டோம்

ஆ: இதயம் ஒன்றாகி போனதே
கதவு இல்லாமல் ஆனதே

பெ: இனி மேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே

ஆ: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

பெ: ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாத்திருந்தோம்
(நீ என்பதே)