Thalai Vazhai Song Lyrics

தலை வாழை இலை போட்டு பாடல் வரிகள்

Naan Yen Pirandhen (1972)
Movie Name
Naan Yen Pirandhen (1972) (நான் ஏன் பிறந்தேன்)
Music
Shankar-Ganesh
Singers
S. Janaki
Lyrics
Vaali
தலை வாழை இலை போட்டு 
விருந்து வைப்பேன் 
என் தலைவா உன் வருகைக்கு 
தவமிருப்பேன் 

தலை வாழை இலை போட்டு 
விருந்து வைப்பேன் 
என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன் 
நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன்
நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன்
உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்
உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன் 

தலை வாழை இலை போட்டு 
விருந்து வைப்பேன் 
என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன் 

மனையறம் தனை காக்க நானிருக்க
என் துணைக் கரம் என என்றும் நீயிருக்க
மனையறம் தனை காக்க நானிருக்க
என் துணைக் கரம் என என்றும் நீயிருக்க
இல்லறம் நலமாக துலங்காதோ
இல்லறம் நலமாக துலங்காதோ 
புவி இன்பமெல்லாம் இங்கு விளங்காதோ

தலை வாழை இலை போட்டு 
விருந்து வைப்பேன் 
என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன் 

கதிரவன் முகம் பார்க்கும் தாமரையும்
தன் காதலை எதிர் பார்க்கும் பெண் மனமும்
கதிரவன் முகம் பார்க்கும் தாமரையும்
தன் காதலை எதிர் பார்க்கும் பெண்மனமும்
ஓரினம் என்பது தான் புரியாதோ
ஓரினம் என்பது தான் புரியாதோ 
என் ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ 
என் ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ
ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ 

தலை வாழை இலை போட்டு 
விருந்து வைப்பேன் 
என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன் 

கொடியினில் பிறந்தது மலரொன்று 
அதன் குளிர் விழி மலர்ந்தது நிலவென்று
மடியினில் தவழ்ந்தது உனைக் கண்டு 
தன் இதழ்களில் உனக்கென தேன் கொண்டு 
ஆ... ஆ... ஆ... ஆ... 

மஞ்சள் கொஞ்சிடும் மாங்கல்யம் 
அது மங்கையர்க் கெல்லாம் பெரும் செல்வம்
மஞ்சள் கொஞ்சிடும் மாங்கல்யம் 
அது மங்கையர்க் கெல்லாம் பெரும் செல்வம்
கண்ணுக்கு நிறைந்த கணவனைத் தவிர
கண்ணுக்கு நிறைந்த கணவனைத் தவிர
பெண்ணுக்கு ஏது ஒரு தெய்வம்
பெண்ணுக்கு ஏது ஒரு தெய்வம்