Ayyo Ayyo Song Lyrics

ஐயோ ஐயோ உன் பாடல் வரிகள்

M. Kumaran S/O Mahalakshmi (2004)
Movie Name
M. Kumaran S/O Mahalakshmi (2004) (M. குமரன்)
Music
Srikanth Deva
Singers
Udit Narayan
Lyrics
ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ
நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ
சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐயய்யோ
நடு இரவினிலே கனவினிலே என்னை தின்றாய் ஐயய்யோ
இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயோ
இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ
இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ
தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ

ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
காலையில் தொடும் போது ஐயோ
மாலையில் தொடும் போது ஐயோ
ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐயய்யோ
குங்கும வாசனைகள் ஐயோ
சந்தன வாசனைகள் ஐயோ
என்னிடம் உன் வாசனை ஐயோ ஐயய்யோ

கொடு கொடு கொடு எனவே கேட்குது கன்னம் ஐயய்யோ
கிடு கிடு கிடுவெனவே பூக்குது மச்சம் ஐயய்யோ
காது மடல் அருகினிலே ஐயோ
பூனை முடி கவிதை ஐயய்யோ
காதலுடன் பேசையிலே ஐயோ
பேச மறந்தாலோ ஐயய்யோ
மழை விட்டாலும் குளிர் என்ன
நீ வந்து போனதாலா
உயிர் சுட்டாலும் சுகம் என்ன
நீ இன்பமான தேளா
(ஐயோ..)

உன் கண்கள் ஐயய்யோ ஐயோ
உன் கண்கள் கண்ட நேரத்தி எல்லாமே ஐயய்யோ
(இசை)

நீ தமிழ் பேசயிலே ஐயோ
நான் அதை கேட்கையிலே ஐயோ
காதலி கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ
நீ எனை தேடயிலே ஐயோ
நான் உனை தேடையிலே ஐயோ
காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ
கல கல கலவெனவே பேசிடும் கண்கள் ஐயய்யோ
குலு குலு குலுவெனவே கோதிடும் கைகள் ஐயய்யோ

கால்கொலுசு ஓசையிலே ஐயோ
நீ சிணுங்கும் பாஷை ஐயய்யோ
ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ
ஆறுசுவை தோணுது ஐயய்யோ
மழை விட்டாலும் குளிர் என்ன
நீ வந்து போனதாலா
உயிர் சுட்டாலும் சுகம் என்ன
நீ இன்பமான தேளா
(ஐயோ..)