Thunintha Pin Song Lyrics

துணிந்த பின் மனமே பாடல் வரிகள்

Devadasu (1953)
Movie Name
Devadasu (1953) (தேவதாஸ்)
Music
C. R. Subburaman
Singers
Ghantasala
Lyrics
Udumalai Narayana Kavi

துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே
சோகம் பொல்லாதே
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே
சோகம் பொல்லாதே

அணையும் காற்றில் அகல் விளக்கேற்றி
மறைப்பதில் பயனுண்டோ – கையால்
மறைப்பதில் பயனுண்டோ – அதனால்
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே
சோகம் பொல்லாதே.....

பாயும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னால்
நீந்துவதால் பயனேது..ஆ....ஆ....ஆ...
சீறும் புயலும் மழையும் சேர்ந்தால்
சின்னக் குடை தாங்காது.......(துணிந்த)

காதல் தந்த துயர் தீர போதை
கடலில் மூழ்கிடலானாய்.....ஆ...ஆ..ஆ..
சாவது நிஜமே நீ ஏன் வீணாய்
சஞ்சல பேய் வசம் ஆனாய்....(துணிந்த).