Maharani Unnai Thedi Song Lyrics

மகாராணி உன்னை தேடி பாடல் வரிகள்

Aayiram Vaasal Idhayam (1980)
Movie Name
Aayiram Vaasal Idhayam (1980) (ஆயிரம் வாசல் இதயம்)
Music
Ilaiyaraaja
Singers
P. Jayachandran, S. Janaki
Lyrics
Pulamaipithan
மகாராணி உன்னை தேடி
வரும் நேரமே
என்றும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி

மகாராணி உன்னை தேடி
வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

பைங்கிளி இவள் மொழி
தமிழ் தமிழ் பைந்தமிழ்
பாடிடும் அதன் சுகம்
தரும் தரும் செவ்விதழ்

வழங்கும் தினம் மயங்கும்
அதில் உலகை மறக்கலாம்
கை வந்து தொட்டது மெல்ல
காமத்து பாலுரை சொல்ல
இளமை பயிலும் தினம்

மகாராணி என்னை தேடி
வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

மார்கழி பனித்துளி
பூவிதழ் சேருமோ
பூவிதழ் சிலிர்த்திட
அது தொடும் பாவமோ

சிலிர்க்கும் இதழ் விரிக்கும்
தன்னை மறந்த நிலையிலே
தென்பாண்டி முத்துக்கள் போலே
என்னென்ன கோலங்கள் மேலே
ரசிக்கும் கவிதை மனம்

மகாராணி என்னை தேடி
வரும் நேரமே
என்றும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி

மகாராணி உன்னை தேடி
வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே