Vaangi Vantha Song Lyrics

வாங்கி வந்த பூ பாடல் வரிகள்

Bhooloham (2015)
Movie Name
Bhooloham (2015) (பூலோகம்)
Music
Srikanth Deva
Singers
Fefsi Doss
Lyrics
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபதாம் வருடம்...
எங்கள் சென்னை மா நகரினிலே...
செண்ட் ஜார்ஜ் கோட்டை அருகினிலே
ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து..
பிரபல பாக்ஸிங் வாத்தியாராய் வாழ்ந்து
இன்று தானாக முடிவு தேடி...
வாழாமல் போனதேனோ...
ஐயா ரத்தினம் ஐயா...
நீ சாகும் போது யாரைச் சொல்லி 
அழைத்தாய் ஐயா...

வாங்கி வந்த பூ மால தான் ஐயா
வாத்தியாரே உன் மேல தான்

வாங்கி வந்த பூ மால தான் ஓ ஐயா
வாத்தியாரே உன் மேல தான்
குத்து சண்டையில அப்பன் புள்ளையா
கட்டிப் புரண்டோம் மாஸ்டர்
இப்ப ஒட்ட வச்சது எங்களை ஏனோ
கண்ணீரு அஞ்சலி போஸ்டர்
ரத்தினம் மாஸ்டரு ரத்தினம் மாஸ்டரு 
எங்க ரத்தமும் சதையுமாயிருந்த
ரத்தினம் மாஸ்டரு 

வாங்கி வந்த பூ மால தான் ஐயா
வாத்தியாரே உன் மேல தான்

திருலக்கேணி மார்க்கெட்டுல 
தவுலத்தா நீ நடந்தா
ரிஸ்கான ரௌடிசெல்லாம் 
சலாம் போட்டு போவான்
போலிஸ் வேல ரயில்வே வேல
ஸ்போர்ட்ஸ் மேனு கோட்டால
எவ்வளோ ஸ்டுடன்ஸுக்கு 
கெடச்சதிங்கு உன்னால

எக்கச்சக வாத்தியார ஸ்கூல்ல பாத்திருக்கேன்
உன்னப் போல கெத்து இல்ல
கத்து தந்த வித்தைகள

ரத்தினம் மாஸ்டரு ரத்தினம் மாஸ்டரு 
எங்க ரத்தமும் சதையுமாயிருந்த
ரத்தினம் மாஸ்டரு 

வாங்கி வந்த பூ மால தான் ஓ ஐயா
வாத்தியாரே உன் மேல தான்

பாசத்தோட வளத்த புள்ள பாட ஓல பின்னுதையா
பச்ச மூங்கில் வெட்டுதையா
கொள்ளி போட கத்துதையா
மீளாத பயணத்துக்கு அழகாக பல்லக்கத் தான்
அழுகைய அடக்கிக்கிட்டு 
அலங்காரம் பண்ணுதையா
மால போட்டு படுக்க வச்சி
மஞ்சளோட குங்குமம் வச்சி
ஒத்த ரூபா நாணயத்த 
நெத்தியில தானே ஒட்ட வச்சி
மேட போட்டு குந்த வச்சி
முன்னால ஒரு மைக்க வச்சி
இந்த கானா தாஸ உன் பெரும 
பாட சொன்னான் பூலோகம்
தேங்ஸு பூலோகம்

ஆட்டக் கணக்குடா விதி போட்ட கணக்குடா
நண்பா கூட்டிப் பெருக்கி கழிச்சி பாத்தா
பூட்டக் கணக்குடா வெறும் ஓட்டக் கணக்குடா

குடும்பம் கூத்தியாருன்னு...
ஒண்ணுமில்லாம வாழ்ந்திட்டாரு...
இந்த வித்தைக்கெல்லாம் இனிமே நாதி யாரு...
பூலோகம் தான் வாத்தியாரு...