Kaadhal Rojave Song Lyrics

காதல் ரோஜாவே பாடல் வரிகள்

Roja (1992)
Movie Name
Roja (1992) (ரோஜா)
Music
A. R. Rahman
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
ஆண் : காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

ஆண் : கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே (இசை)

பெண்குழு : ல..ல ல...லலலா...ல..ல ல...லலலா..
ல..ல ல...லலலா..லல லல லல லலலா....

***

ஆண் : தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

ஆண் : வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்


ஆண் : காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

பெண்குழு : ஆ...ஆ...ஆ...ஆ....ஆ.....ஆ...ஆ....

***

ஆண் : வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்து போ

ஆண் : பாவையில்லை பாவை ,தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்


ஆண் : காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்