Thella Thelintha Thaen Song Lyrics

தெள்ளத் தெளிந்த தேனமுதே பாடல் வரிகள்

Indira En Selvam (1962)
Movie Name
Indira En Selvam (1962) (இந்திரா என் செல்வம்)
Music
C. N. Pandurangan
Singers
Jayalakshmi
Lyrics

தெள்ளத் தெளிந்த தேனமுதே அள்ளி அருந்தவா
உள்ளம் கொள்ளை கொண்டவளே உணர்வு தந்திடவா
வெள்ளி நிறைந்த வானதிலே அம்புலி பாராய்
துள்ளி தாவுமுன் எழிலதிலே துன்பம் தீருமே (தெள்ளத்)

மாலைக் கதிரவன் காண்பாய் – உன்
மேனி நிறம் தங்கமாமே
மாலைப் பொழுதினிலே நறு மஞ்சள் வெய்லதிலே
சோலைக் குயில் குரல் கேட்பாய்
உன் சுந்தர மழலைச் சொல் கேட்க..

வாலைப் பருவம் நீ எய்தால் – என்
வாழ்விலின்பம் அதுதானே
ஆடை ஆபரணம் பூட்டி நிதம்
அலங்காரம் செய்வேன் சீமாட்டி
சடை வாரி பூவையும் சூட்டி – நடை
அழகினை காண்பேன் கண்ணாட்டி

பள்ளிக்கு சென்றிட வேண்டும் – கல்வி
கற்றவளாகிட வேண்டும்
உற்ற சேவை செய்திட வேண்டும் – உனை
ஊரார் போற்றிட வேண்டும்
பள்ளிக்கு சென்று வா பாப்பா.....