Un Paarvayil Song Lyrics

உன் பார்வையில் ஓராயிரம் பாடல் வரிகள்

Amman Kovil Kizhakale (1986)
Movie Name
Amman Kovil Kizhakale (1986) (அம்மன் கோயில் கிழக்காலே)
Music
Ilaiyaraaja
Singers
K. J. Yesudas, K. S. Chithra
Lyrics
Gangai Amaran
உன் பார்வையில் ஓராயிரம்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்

இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும்
இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும்

மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து இருந்து பறந்து தினம் மகிழ

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

அணைத்து நனைந்தது தலையணை தான்
அடுத்த அடி என்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத் தான்
இடுப்பை வளைத்துனை அணைத்திடத்தான்

நினைக்க மறந்தால் தனித்து பறந்தேன்
நினைக்க மறந்தால் தனித்து பறந்தேன்

மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகச்சிறை இருப்பாயோ
இருந்து விருந்து மனம் இரன்டு மனம் இனைய

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே...