Aathadi Aathadi Song Lyrics

ஆத்தாடி ஆத்தாடி பாடல் வரிகள்

Anegan (2014)
Movie Name
Anegan (2014) (அனேகன்)
Music
Harris Jayaraj
Singers
Dhanush, Tippu
Lyrics
Vairamuthu
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசைப் பட்டு பூத்திருக்கா வா

ஒன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப் பகலா காத்‌திருக்க வா

இது முதல் முதலாய்
சிலு சிலுப்பு
முதுகு தண்டில் குறுகுறுப்பு
முழு வெவரம் எனக்கு சொல்வாயா

என் அடி மனசில் சுகமிருக்கு
அடி வயித்தில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா

ஆத்தாடி

ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா

ஒன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்க வா

நீ மகுடத்தில் வைர கல்லு
நானோ மழ பேஞ்சா உப்பு கல்லு
உன்ன தொடவும்
விரல் படவும்
ஒரு பொருத்தம் எனக்கு ஏது

நான் தரமான தங்கக்கட்டி
நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி
என்னை அடைக்க காத்து கெடக்க
உன்ன போல ஆளு ஏது

ஆசையா இருந்தா கூட
மனம் மசியாது
ஆத்துல விழுந்தா கூட
நிழல் நனையாது

உள்ளுக்குள் உள்ள கிறுக்கு
உன்ன சும்மா விடாது

ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்காளா

என் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்காளா

கடிகார முள்ளப் போல
என்ன கணம் தோறும் சுத்தி வாயா
என்ன தொரத்து தூள்பரத்து
இந்த அல்லிப் பூ கிள்ளி போயா

புளி மூட்ட தூக்கி பாத்தேன்
இப்ப பூ மூட்ட தூக்க போறேன்
இளஞ் சிரிக்கி உன்ன முறுக்கி
என் அருணாக் கயிறு ஆக்க போறேன்

இடுப்புல கயிறா கெடக்க
மனம் தயங்குதையா
கழுத்துல கயிறா வந்தா
நித்தமும் சொந்தம் அய்யா

விழியால் தொட்ட அழகே
இந்த ஆச மாறாதே

ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பபட்டு பூத்திருக்கா வா

உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப் பகலா காத்திருக்க வா

இது முதல் முதலாய்
சிலு சிலுப்பு
முதுகு தண்டில் குறுகுறுப்பு
முழு வெவரம் எனக்கு சொல்வாயா

என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயித்தில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா.