Naalai Ulagam Song Lyrics

நாளை உலகம் இல்லை பாடல் வரிகள்

Love Birds (1996)
Movie Name
Love Birds (1996) (லவ் பேட்ஸ்)
Music
A. R. Rahman
Singers
P. Unnikrishnan, Sujatha Mohan
Lyrics
Vairamuthu
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

கண்களை திறந்து காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன்

மண்டியிட்டமர்ந்து மண்ணகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்

உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து
நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

நாளை உலகம் நாளை உலகம்
இல்லை என்றானால்
அன்பே என்ன் செய்வாய்

ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
ஒரு நாளில் வாழ்ந்து கொள்வேன்

உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து
இரு விழி மூடிக் கொள்வேன்

மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து
மரணத்தை மறிக்க வைப்பேன்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

கண்களை திறந்து காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக்கொள்வேன்

மண்டியிட்டமர்ந்து மண்ணகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்

உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து
நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்

காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூ லோகம் அழிவதில்லை

ஆயிரம் மின்னல் தெரிக்கின்ற போதும்
வானம் கிழிவதில்லை

காதல் நிலமாகும் நிலம் காதலாகும்
நம் பூமி மறைவதில்லை

உடல்களும் போகும் உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை

நாளை உலகம் இல்லை என்றானால்
உயிரே என்ன செய்வாய்

நாளை உலகம் இல்லை என்றானால்
உயிரே என்ன செய்வாய்

வானையும் வணங்கி மண்ணையும் வணங்கி
உனை நான் தழுவிக் கொள்வேன்

ஆயிரம் பூவில் படுக்கையும் அமைத்து
உன்னையும் அனைத்து உயிர் தரிப்பேன்

என் உயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும்
உன் உயிர் காத்து உயிர் துறப்பேன்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்