Intha Poovukku Oru Song Lyrics

இந்த பூவுக்கொரு பாடல் வரிகள்

Poovarasan (1996)
Movie Name
Poovarasan (1996) (பூவரசன்)
Music
Ilaiyaraaja
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே

மெல்ல மெல்ல பூத்து வரும் உன் முகத்தை பார்த்து வரும்
நெஞ்சுக்குள்ள நட்டு வெச்ச நாத்துதான்
உள்ளபடி சொல்ல போனா உன்னிரண்டு கண்ணு பட்டு
உள்ளுக்குள்ளே பொங்குதொரு ஊத்துதான்

பொங்குகிற ஒடை ஒண்ணு பக்கத்துல நிக்கயில
நீச்சலிட ஓடி வரும் காத்துதான்
சித்திரமே நீயும் ஒரு உத்தரவு தந்து விடு
அள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்து தான்

காதோரம் ஆசை ஆசையாய் கதை பேசும் காலம் தான் இது
ஏதேதோ பேசி பேசியே என்னை நீங்கி கூச்சம் போனது

ஒரு வாரம் ஒரு மாதம் உறங்காமல் ஒரு மோகம்
தனியாய் இருந்தால் தணலாய் எறியும் போதும் ஏகாந்தம்

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே

எப்படியும் ஆவணிக்குள் செப்பு சிலை தாவணிக்குள்
தொட்டில் கட்டி பிள்ளை போல ஆடுவேன்
என்னுடைய எண்ணப்படி கை கொடுக்கும் அம்மனுக்கு
சொன்னப்படி தேர் இழுத்து பாடுவேன்

வைகை நதி கை இணைக்க தென் மதுரை இங்கிருக்க
வங்க கடல் பக்கம் அது போகுமா
நட்ட நடு ஜாமத்திலும் பட்ட பகல் வேளையிலும்
நின்றிருப்பேன் உன்னுடைய தாகமா

மாம் பூவே மாலை வேளையில் மடி சேரு தாகம் தீர்க்கிறேன்
தாம்பூலம் மாற்றி ஆகட்டும் உனை நானே கையில் சேர்க்கிறேன்

உனை நானும் அடையாது பசி தாகம் கிடையாது
இளைத்தேன் இளைத்தேன் இனியும் இளைத்தால் தேகம் தாங்காது

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே

நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே