Unavu Sellavillai Sagiye Song Lyrics

உணவு செல்லவில்லை சகியே பாடல் வரிகள்

Samsarame Saranam (1989)
Movie Name
Samsarame Saranam (1989) (சம்சாரமே சரணம்)
Music
Shankar-Ganesh
Singers
Mano
Lyrics
Mahakavi Bharathiyar
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை.
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை

மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை
மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை

உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை....

பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி
பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி
கோலக் கிளிமொழியும் செவியில்
குத்தலெடுத்ததடி
கோலக் கிளிமொழியும் செவியில்
குத்தலெடுத்ததடி

நாலு வயித்தியரும் இனிமேல்
நம்புதற்கில்லை என்றார்
பாலத்துச் சோசியனும் கிரகம்
படுத்தும் என்று விட்டான்..

உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை.
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை

கனவு கண்டதிலே ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்
கனவு கண்டதிலே ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்

இனம் விளங்கவில்லை எவனோ
என் அகம் தொட்டு விட்டான்.
இனம் விளங்கவில்லை எவனோ
என் அகம் தொட்டு விட்டான்

வினவக் கண் விழித்தேன் சகியே
மேனி மறைந்து விட்டான்
மனதில் மட்டிலுமே புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடி.....

உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை.
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை

மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை
மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை

உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை....
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை.....