Thendral Kaathae Song Lyrics

தென்றல் காத்தே பாடல் வரிகள்

Kumbakarai Thangaiah (1991)
Movie Name
Kumbakarai Thangaiah (1991) (கும்பக்கரை தங்கய்யா)
Music
Ilaiyaraaja
Singers
Lyrics
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் மொகத்த பாத்து தான்
வந்து சேர சொல்ல மாட்டியா

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா


முத்து மேனி தான் பட்டு ராணி தான்
முழுதும் வாழும் யோகம் தான்

தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும்
தொடரும் எனது வேகம் தான்

நீயும் நானும் பாலும் தேனும்
நீயும் நானும் பாலும் தேனும்
போல ஒண்ணா கூடனும்

வானம் போல பூமி போல
சேர்ந்து ஒண்ணா வாழனும்

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா

கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா


இந்த பூமியும் அந்த வானமும்
இருக்கும்கோலம் மாறலாம்
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்
என்றும் மாற கூடுமோ

காத்து வாழும் காலம் யாவும்
காத்து வாழும் காலம் யாவும்
காதல் கீதம் வாழுமே

கனவு கூட கவிதையாகி
உனது புகழ பாடுமே

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா

கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

மாமன் மொகத்த பாத்து தான்

மணமால வந்து போடவா

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா

கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா