Aye Aye Aye Song Lyrics

அயே அயே அயே பாடல் வரிகள்

Aambala (2015)
Movie Name
Aambala (2015) (ஆம்பள)
Music
Hiphop Tamizha
Singers
Hiphop Tamizha
Lyrics
Hiphop Tamizha
உண்மையான
காதல் எங்கே

தேடி பாத்தேன்
உலகத்திலே

கண்ணை மயக்கும்
பெண்கள் இங்கே

உன்னை கண்டு
நானும் விழுந்தேன்

பெண் எல்லாம் பொய்யா
என் மேல் காதல் இல்லையா

நீ சொல்லாத சொல்லில்
நான் வாழ வில்லையா

அடி உன்னை கண்டு காதல் கொண்டு
நெஞ்சம் சாய்கிறதே

அயே அயே அயே ஹே
அயே அயே அயே ஹே

நீ தான் என் காதல் என்று
சொல்லவா

அயே அயே அயே ஹே
அயே அயே அயே ஹே

உனை மட்டும் நானும்
அள்ளி கொள்ளவா

அடி நீ செல்லும்போது
என் காதல் தீராது

நீ எனை விட்டு சென்றால்
என் நெஞ்சம் தாங்காது

உயிர் போனாலும் போக
நீ என்னோடு வாழ

வேண்டும் வேண்டும் நீயே வேண்டும்
என்றே நெஞ்சம் சொல்லுதே

உனை மட்டும் பாத்திருக்க
என் நெஞ்சம் கொஞ்சம் தான் காக்குமா

என்னை நீ காணும்போது
உன் கண்கள் நெஞ்சுதான் தாக்குமா

பெண்ணே நாம் இருக்கும் இந்த இந்த
இரவிலே ஒரு இனிமை தான்

உன்னுள் நான் வந்து
கொண்டாடும் நேரம் அல்லவா

உன்னை பற்றி பேசும் போது
எந்தன் நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

என் மேல் காதல் காற்று வீச
நெஞ்சம் பஞ்சு போல மாறும் பெண்ணே

போதும் போதும் என்று
நீயும் பொய்கள் பேசினாலும்

உன்னை பற்றி மட்டும் தான்
நினைக்கும் நெஞ்சம் பார்
காதல் செய்திடவே

அயே அயே அயே ஹே
அயே அயே அயே ஹே
நீ தான் என் காதல் என்று
சொல்லவா

அயே அயே அயே ஹே
அயே அயே அயே ஹே
உனை மட்டும்
நானும் அள்ளிக் கொள்ளவா

அடி நீ செல்லும்போது
என் காதல் தீராது

நீ எனை விட்டு சென்றால்
என் நெஞ்சம் தாங்காது

உயிர் போனாலும் போக
நீ என்னோடு வாழ

உனை மட்டும் நானும் நெஞ்சில்
நினைத்திடவா

உந்தன் நினைவுகளால் நெஞ்சை நிரப்பிடவா

நினைத்திட நெஞ்சம் மட்டும் மருத்துவிட்டால்

அந்த நெஞ்சத்தை உன் கையில் கொடுத்திடவா

காத்திருக்க நினைக்க
காதலிக்க துடிக்க

உனை எந்த கைகளுக்கு
கட்டி நானும் விழிக்க

வா பெண்ணே விளையாடு
இந்த மஞ்சமீது நீ குடியேறு

கத்தை கத்தையாக ஒரு
முழு முழு மெத்தை

மெத்தை மீது காட்டிடுவேன்
கற்றுக் கொண்ட வித்தை

அத்தையவள் பெற்றெடுத்த விலையில்லா முத்தை

முத்தம் ஒன்று தந்து எழுதிடுவேன் சொத்தை

அயே அயே அயே ஹே
அயே அயே அயே ஹே
நீ தான் என் காதல் என்று சொல்லவா

அயே அயே அயே ஹே
அயே அயே அயே ஹே
உனை மட்டும் நானும் அள்ளிக்கொள்ளவா

அடி நீ செல்லும்போது
என் காதல் தீராது

நீ எனை விட்டு சென்றால்
என் நெஞ்சம் தாங்காது

உயிர் போனாலும் போக
நீ என்னோடு வாழ

வேண்டும் வேண்டும் நீயே வேண்டும்
என்றே நெஞ்சம் சொல்லுதே