Nee Paakkama Poriye Idhu Song Lyrics

நீ பாக்காம போறியே பாடல் வரிகள்

Manaivi Oru Manthiri (1988)
Movie Name
Manaivi Oru Manthiri (1988) (மனைவி ஒரு மந்திரி)
Music
Shankar-Ganesh
Singers
S. P. Balasubramaniam, Uma Ramanan
Lyrics
Vaali
ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா
உன் பாட்டாத்தான் பாடுறேன் நெடு நேரமா
மாசம் தேதி தான் பாக்க வேணுமா நீ பேச
மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச


பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா
உன் பாட்டாத்தான் பாடுறேன் பல வாரமா
பார்த்து பேசினால் வேர்த்து ஊத்துதே என் தேகம்
கால சூரியன் போல காயுதே உன் தேகம்


ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா
பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா


பெண் : மஞ்சள் பூசுற போதும் மச்சான் ஞாபகம் ஓடும்
நினைக்குற போதே சிலிர்க்கிறதென்ன
ஆண் : உச்சந்தலையில சூடு தானா ஏறுது பாரு
உணர்ச்சியை நீதான் உசுப்புவது என்ன


பெண் : உள்ளக் கதவுகள மெல்ல திறக்கிறியே
ஆண் : வெள்ளம் வருகையிலே மடையை அடைக்குறியே
பெண் : நாலு பேர்கள் பார்க்கும் போது மானம் போகுமே

ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா
உன் பாட்டாத்தான் பாடுறேன் நெடு நேரமா
பெண் : பார்த்து பேசினால் வேர்த்து ஊத்துதே என் தேகம்
கால சூரியன் போல காயுதே உன் தேகம்
ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா
பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா


பெண் : பந்த கால்கள போட்டு பன்னீர் பூக்களை சூட்டு
உதட்டுல தேனு கொடுக்கிறேன் நானு
ஆண் : ஒத்தி போடுவதேம்மா ஒட்டி பேசிட வாமா
பசிக்குற நேரம் படைச்சிட வேணும்

பெண் : ஆக்க பொறுத்திருந்தும் ஆறப் பொறுக்கலையே
ஆண் : இன்னும் காத்திருக்க என்னால் ஆகலையே
பெண் : கேணி நீரை ஆற்று வெள்ளம் கொண்டு போகுமா


பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா
உன் பாட்டாத்தான் பாடுறேன் பல வாரமா
ஆண் : மாசம் தேதி தான் பாக்க வேணுமா நீ பேச
மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச

ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா
பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா