Maamarathu Poo Song Lyrics

மாமரத்து பூ எடுத்து பாடல் வரிகள்

Oomai Vizhigal (1986)
Movie Name
Oomai Vizhigal (1986) (ஊமை விழிகள் )
Music
Manoj
Singers
S. N. Surendar, Sasirekha
Lyrics
Aabhavanan
ஆ : மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம் விரைவில் அரங்கேறிடும்
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா

பெ : கூந்தலில் பூச்சூடினேன் கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது...ஆ ஆ
கூடவந்த நாணம் தடுக்குது
கூந்தலில் பூச்சூடினேன் கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது...ஆ ஆ
கூடவந்த நாணம் தடுக்குது
ஆ : கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது

ஆ : மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா

சித்திரப்பூவிழி பாரம்மா சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா...ஓ ஓ
முத்து ரதம் எனக்குத்தானம்மா
சித்திரப்பூவிழி பாரம்மா சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா...ஓ ஓ
முத்து ரதம் எனக்குத்தானம்மா
பெ : உனக்காக உயிர் வாழ இந்த பிறவி எடுத்தது
உயிரோடு உயிரான இந்த உறவு நிலைத்தது 
மாமரத்து பூ எடுத்து மங்கை என்னை தேடிவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி ஓடிவா
கண்ணா புது நாடகம் விரைவில் அரங்கேறட்டும் 

ஆ/'பெ : மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடலாம்
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடலாம்