Amma Amma Nee Song Lyrics

அம்மா அம்மா நீ பாடல் வரிகள்

Velaiyilla Pattathari (2014)
Movie Name
Velaiyilla Pattathari (2014) (வேலையில்லா பட்டதாரி)
Music
Anirudh Ravichander
Singers
Dhanush, S. Janaki
Lyrics
Dhanush
அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

தேடிப்பாத்தேனே
காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன்
வா நீ வெளியே

தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்

அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

நான் தூங்கும் முன்னே
நீ தூங்கி போனாய்
தாயே என்மேல்
உனக்கென்ன கோபம்

கண்ணான கண்ணே
என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்

ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்

பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்குகம் துணையின்றி இருளானதே

உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையானதே

ஓ...
அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

நான் போன பின்னும்
நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சே உனக்குள்ளும் உண்டு

வானெங்கும் வண்ணம்
பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு

நீயென் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை

ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே

காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை

அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

எங்க போனாலும்
நானும் வருவேன்
கண்ணாடி பாரு
நானும் தெரிவேன்

தாயே உயிர் பிரிந்தாயே
கண்ணே நீயும் என் உயிர் தானே

இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும்