Kaattukuyillu Song Lyrics

காட்டுக்குயிலு பாடல் வரிகள்

Thalapathi (1991)
Movie Name
Thalapathi (1991) (தளபதி)
Music
Ilaiyaraaja
Singers
K. J. Yesudas, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
ஆண்-1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண்-2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

ஆண்-1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண்-2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

ஆ & பெ குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய்...

ஆண்-1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண்-2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

***

ஆண்-1 : போடா எல்லாம் விட்டுத் தள்ளு
பழச எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு
எண்ணிக்கொள்ளடா....டோய்..

ஆண்-2 : பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்
சும்மா நில்லடா...டோய்..

ஆண்-1 : ஊதக் காற்று வீச உடம்புக்குள்ள கூச
குப்ப கூலம் பத்தவச்சி காயலாம் ஹோய்..

ஆண்-2 : தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்

ஆ1 & ஆ2 : அச்சி வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹோய்..

ஆண்-1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண்-2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

ஆ & பெ குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
ஆஆஹா..காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

***

ஆண்-1 : பந்தம் என்ன சொந்தம் என்ன
போனால் என்ன வந்தால் என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட
ஜென்மம் நானில்லை....ஹ.ஹா..

ஆண்-2 : பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லே..

ஆண்-1 : உள்ள மட்டும் நானே
உசிரைக் கூடத்தானே

ஆண்-2 : என் நண்பன் கேட்டால்
வாங்கிக்கன்னு சொல்லுவேன்

ஆண்-1 : என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு

ஆண்-2 : நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்

ஆ1 & ஆ2 : சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு
ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான்....ஹேய்..

ஆண்-1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண்-2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

ஆ & பெ குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய்...
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் (இசை)