Nenjukulle Innarunnu Song Lyrics

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு பாடல் வரிகள்

Ponumani (1993)
Movie Name
Ponumani (1993) (பொன்னுமணி)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி

ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா

***

பெண் : நேசபட்டு பட்டு நான் இளைத்தேனே
ஆண் : அஹஹா.. ஹா..அஹஹா..ஹ ஹா...
பெண் : ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலிர்த்தேனே
ஆண் : ஒஹொஹோ ஹோ ஒஹொஹோ ஹொ..ஹொய்
தூக்கம் கெட்டு கெட்டு
துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மர தேகம் தொட்டு
தேடி வந்து தாளம் தட்டு
பெண் : என் தாளம் மாறாதைய்யா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி


பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி
பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா

***

ஆண் : காஞ்சிபட்டு ஒண்ணு நான் கொடுப்பேனே
பெண் : ஒஹொஹோ ஹோ ஒஹொஹோ ஹொய்..ஹொய்
ஆண் : காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே
பெண் : அஹஹா.. ஹா..அஹஹா..ஹ ஹா...
மாமன் உன்னை கண்டு ஏங்கும் அல்லி தண்டு
தோளில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று
ஆண் : என் கண்ணில் நீ தானம்மா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணியின்

ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
பெண் : அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
ஆண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது
பெண் : உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
ஆண் : உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி

பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா