Kuliruthu Kuliruthu Song Lyrics

குளிருது குளிருது பாடல் வரிகள்

Taj Mahal (1999)
Movie Name
Taj Mahal (1999) (தாஜ் மஹால்)
Music
A. R. Rahman
Singers
P. Unnikrishnan, Swarnalatha
Lyrics
Vairamuthu
குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடல் அலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எறிவதில்லை
(குளிருது..)

இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளின் முடி கொண்டு தடவு
நெஞ்சிக்குள்ளும் எறியுது நெருப்பு
இந்த நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு
இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்
தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்
பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிகாரம்
மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்
நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்
(குளிருது..)

நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்
முகத்துக்கும் முத்ததுக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா
மழைத் துளி மழைத்துளி தொல்லையா
அட அடை மழை தாங்க எண்ணம் இல்லையா
சுற்றி எல்லாம் எறிகிற போது
நாம் இன்பம் கொள்வது தீது
அடி பூகம்ப வேலையிலும்
இரு வான்கோழி களவி கொள்ளும்
தேகத்தை அணைத்து விடு சுடும்
தீ கூட அணைந்துவிடும்
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
சுற்றி நின்றாலும் தீவண்ணம் அணைவது தின்னம்
(குளிருது..)