Sirage illatha poonkuruvi Song Lyrics

சிறகே இல்லாத பூங்குருவி பாடல் வரிகள்

Thali Puthusu (1997)
Movie Name
Thali Puthusu (1997) (தாலி புதுசு)
Music
Deva
Singers
Harish Raghavendra
Lyrics
Viveka
சிறகே இல்லாத பூங்குருவி ஒன்று வானத்தில் தவிக்கிறது..

துடுப்பே இல்லாத படகு ஒன்றை இன்று ஆழ் கடல் குடிகிறது...

உதய காலமே இரவு ஆனதே யார் செய்த பாவமடி
விழுது இன்றுதான் வேரைத் தின்றதே யார் தந்த சாபமடி..

சிறகே இல்லாத பூங்குருவிஒன்று வானத்தில் தவிக்கிறது...

துடுப்பே இல்லாத படகு ஒன்றை இன்று ஆழ் கடல் குடிகிறது...

வாசல் இல்லாத வீட்டிலே கோலம் நீ போட்டது..
பூக்கள் இல்லாத சோலையில் வாசம் நீ கேட்டது..
இந்த சோகம் யார் கொடுத்த சாபம் தொடரும் இந்த துயரத்தின் முடிவேதம்மா..
நடு இரவில் வெயில் அடிக்க மனதில் புயலடிக்க வேறென்ன விதிதானம்மா.. கட்டிய தாலிக்கோ ஆயுளில் குறையடி கனவுகள் அறுந்ததடி... புகுந்த வீட்டுக்கோ புத்தியில் குறையடி போகட்டும் மறந்திடடி..

சிறகே இல்லாத பூங்குருவி ஒன்று வானத்தில் தவிக்கிறது..
துடுப்பே இல்லாத படகு ஒன்றை இன்று ஆழ் கடல் குடிகிறது...

பாதை வழி மாறிப் போகுமோ பயணம் முடிந்திடுமோ.. சோகம் உன் நெஞ்சில் மூழ்குமோ சொந்தம் கை தருமோ...
அடி மாலை நீ தொடுக்கும் வேலை வரும் போது பூக்கள் சருகானதே...
இங்கு உருகும் மெழுகொன்று சுடரும் வரம் கொண்டு புயலுடன் தடுமாறுதே.. பாடலுன் வெண்மையாய் கலந்த சோகங்கள் பெண்மைக்கு நிரந்தரமா??
மானுட வேதங்கள் தாவிலும் வேதங்கள் உண்மைக்கு வழி விடுமா??..

சிறகே இல்லாத பூங்குருவி ஒன்று வானத்தில் தவிக்கிறது...
துடுப்பே இல்லாத படகு ஒன்றை இன்று ஆழ் கடல் குடிகிறது...

உதய காலமே இரவு ஆனதே யார் செய்த பாவமடி விழுது இன்றுதான் வேரைத் தின்றதே யார் தந்த சாபமடி..

சிறகே இல்லாத பூங்குருவி ஒன்று வானத்தில் தவிக்கிறது... துடுப்பே இல்லாத படகு ஒன்றை இன்று ஆழ் கடல் குடிகிறது!!