Kannan Vanthu Song Lyrics

கண்ணன் வந்து பாடல் வரிகள்

Rettai Vaal Kuruvi (1987)
Movie Name
Rettai Vaal Kuruvi (1987) (ரெட்டை வால் குருவி)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki
Lyrics
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
...

கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே
காதலென்னும்.. ஓ ஓ..
காதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக் குயில் கொஞ்சுதம்மா
இவள் வண்ணங் கோடி.. சின்னந் தேடி
மின்னும் தோளில் கன்னங் கூட
சந்தம் பாடி.. சொந்தம் தேடி.. சொர்கங்கள் மலர்ந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
...

வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான்
கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள்
ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே
மாலை நிலா.. ஆ ஆ..
மாலை நிலா பூத்ததம்மா.. மௌன மொழி சொல்லுதம்மா
ஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில்
வண்டு பேசும்.. தென்றல் வீசும்
கண்ணன் பாட.. கண்கள் மூட.. கன்னங்கள் சிவந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
...