Iravu Pagalai Theda Song Lyrics

இரவு பகலை தேட பாடல் வரிகள்

Kannukkul Nilavu (2000)
Movie Name
Kannukkul Nilavu (2000) (கண்ணுக்குள் நிலவு)
Music
Ilaiyaraaja
Singers
K. J. Yesudas
Lyrics
இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ அச்சச்சோ…

இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம்
எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்
தென்றல் வந்து பூக்கள் ஆடும் அதுவொரு காலம்
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம்
கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும் தனியாக அழகில்லையே
கடலைச் சேரா நதியைக் கண்டால்
தரையில் ஆடும் மீனைக் கண்டால்
ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்
அச்சச்சச்சோ…

இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

வீசும் காற்று ஓய்வைத் தேடி எங்கே போகும்
பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும்
மாலை நேரம் பறவைக் கூட்டம் கூட்டைத் தேடும்
பறவை போனால் பறவைக் கூடு யாரைத் தேடும்
நாடோடி மேகம் ஓடோடி இங்கே யரோடு உறவாடுமோ
அன்னையில்லா பிள்ளை கண்டால்
பிள்ளையில்லா அன்னை கண்டால்
அன்பேயில்லா உலகம் கண்டால்
அச்சச்சச்சோ…

இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ அச்சச்சோ…

இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட