Thuluvadho ilamai Song Lyrics

துள்ளுவதோ இளமை பாடல் வரிகள்

Kudiyirundha Koyil (1968)
Movie Name
Kudiyirundha Koyil (1968) (குடியிருந்த கோயில்)
Music
M. S. Viswanathan
Singers
L. R. Eswari, T. M. Soundararajan
Lyrics
Vaali
பட்டு முகத்து சுட்டி பெண்ணை
கட்டி அணைக்கும் இந்த கைகள்
வட்டம் அடிக்கும் வண்டு கண்கள்
பித்தம் அனைத்தும் இன்ப கதைகள் ஆ..

துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை

மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி
மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி
நீராட ஓடிவா நீராட ஓடிவா
வேல் ஆடும் பார்வை தாளாத போது
வேல் ஆடும் பார்வை தாளாத போது
நோகாமல் ஆடவா நோகாமல் ஆடவா
(துள்ளுவதோ இளமை …)
ஹோய் .. பப்பா
ஹோய் .. பப்பா
ஹோய் .. பப்பா
ஹோய் .. பப்பா

தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை
தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை
நானாக அள்ளவா நானாக அள்ளவா
தீராத தாகம் பாடாத ராகம்
தீராத தாகம் பாடாத ராகம்
நாளெல்லாம் சொல்லவா
நாளெல்லாம் சொல்லவா
(துள்ளுவதோ இளமை …)
ஹோய் ..பப்பா ஹோய் ..பப்பா

காணாத கோலம் நீ காணும் நேரம்
வாய் பேச தோன்றுமா வாய் பேச தோன்றுமா
ஆணோடு பெண்மை ஆறாகும் போது
வேறின்பம் வேண்டுமா
வேறின்பம் வேண்டுமா
(துள்ளுவதோ இளமை …)