Anantha Kuyilin Pattu Song Lyrics

ஆனந்த குயிலின் பாடல் வரிகள்

Kadhalukku Mariyaathai (1997)
Movie Name
Kadhalukku Mariyaathai (1997) (காதலுக்கு மரியாதை)
Music
Ilaiyaraaja
Singers
Malaysia Vasudevan
Lyrics
Palani Barathi
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே
கனிகள் தித்திப்பா
கவிதை தித்திப்பா
அது அன்பை விட தித்திப்பா

ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே

பூமி எங்கும் கண்டதில்லை பாசத்தை உன்போலே

வேறெதுவும் தேவை இல்லை அன்புக்கு முன்னலே

நெஞ்சுக்குள்ளே பூ மலரும் வீட்டுக்குள் வந்தாலே

நிம்மதியில் கண்வளரும் பாட்டுக்கள் தந்தாலே

இந்த சொந்தங்கள் போதுமே எங்கள் இன்பங்கள் கூடுமே

அன்பென்னும் தீபம் ஏற்றிய வீடும் தெய்வத்தின் ஆலயம்தான்

வீடு என்றால் மோட்சம் என்பார் வீடு கண்டோம் நேசத்திலே

தகச்சு நிகதான் தான் தான் தஜின தஜின தான்
தகச்சு நிகதான் தான் தான்

Silence

அடேங்கப்பா

The Skies Are Grey And Cloudy And We Are Feeling Blue

The Skies Are Grey And Cloudy And We Are Feeling Blue
Ur Going To Be Our Sunlight And Make Our Dreams Come True
Love Is Always There With Us Together
Feelings Are Forever And Forever

அன்பினிலே அன்பினிலே ஆலயம் கண்டேனே
அண்ணன்களின் கைகளிலே தீபமும் நான்தானே

பாசத்திலே வாசம் தரும் பூவனம் நீதானே
நேசத்திலே ராகம் தரும் வீணையும் நீதானே

சிலர் வேதம் பாடலம் சிலர் கீதை தேடலாம்
நான் கண்ட வேதம் நான் கண்ட கீதை அண்ணனின் வார்த்தைகள் தான்

வானில் நிலா தேய்ந்திடலாம் பாச நிலா தேய்ந்திடுமா

ஆனந்த குயிலின் பாட்டு  தினம் எங்களின் வீட்டுக்குள்ளே

பூக்களில் நனையும் காற்று  தினம் எங்களின் தோட்டத்திலே

கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே

கனிகள் தித்திப்பா
கவிதை தித்திப்பா
அது அன்பை விட தித்திப்பா

 ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே